44 - என் சுவாசமே!

img338/36/144960hi9.png 

 !…
எனது நிழலில்
ஒளிந்து கொண்டே
எனக்கு
மருத்துவம் பார்க்க மறுக்கும்
என் இதயத்துத் தேவதையே!

 இப்போதும்
உனை நான் நெருங்க நெருங்க

நீ எனை விட்டு
விலகி விலகியே செல்கிறாய்!

 உனது நிழலைத் தேடியலைந்து
நாளெல்லாம்
காதலால் கவிமாலை புனைந்து
உனக்காய் காத்திருக்கிறேன்!

 நான் நடந்து செல்லும்
பாதைகள் எங்கிலும்
உன் நினைவுகளின் தடங்கள்தான்!

 கடலின் கரையில்
நடக்கும் பொழுதிலும்
அலையாய் வந்து
என் கால் பிடித்திழுப்பதும்
உன் நினைவுகள்தான்!

 இப்படியே
உன் நினைவுகளின் கிளைகளைப்
பிடித்துத் தொங்கித் தொங்கி
உனக்காய்த் தேய்ந்து தேய்ந்து
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இந்த மனசு!

 !…
என் சுவாசமே!

 இன்னும் எத்தனை காலங்களிற்கு
மௌன யுத்தம் செய்து
எனைக் கொல்லப் போகின்றாய்…?

 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8634&st=0&#entry124498

 
*** இவள் - சத்தியா ***
user posted image

45 - என் வானத்துத் தேவதையே!

img267/8690/07071306302810166851784wr9.png 

என் வானத்துத் தேவதையே!

அடி
என் வானத்துத்
தேவதையே!

வந்த ஒரு நாளிலேயே
ஒரு விநாடிப் பொழுதில்
மின்னலாய் பறந்து வந்து
என் இதயத்துக்குள் புகுந்து…

இம்சை செய்த
இன்பத்துப் பட்டாம் பூச்சி
நீ தானடி!

பள்ளிப் பூங்காவில்
என் படிப்பை
அடிக்கடி குழப்பித் திரியும்
பருவத்துத் தேரும் நீ தானடி!

நான்
என்ன பாவம் செய்தேன்…?

நரகம் பிடித்த நாளாய்
நகர்ந்த பகலிலும்…

கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்…

உனக்காய் ஏங்குகிறேன்
உன் நினைவில் வாடுகிறேன்!

துக்கம் நெஞ்சைப் பிழிய
தூக்கம் தொலைத்துக் கிடக்கிறேன்!

விழி மூடிக் கொள்ள முடியாமல்
விழித்துக் கொண்டு…

உன்னிடம்
காதல் பிச்சை ஏந்துகிறேனே…!

ஏன் இப்படி
என்னை வஞ்சித்தாய்…?

 
 *** இவள் - சத்தியா ***
user posted image

 

 

46 - ஒரு முத்தம்!

img187/5772/hhhkc5.png 

என் இதயத்துள் புகுந்த
இனிய தேவதையே!

உனது விழி வாசல்
கற்கண்டுப் பார்வையில்
எனை இழந்தவன் நான்!

சில காலமாய்
என் இதயத்துள் நுழைந்து
என் உயிர்வரை கலந்து
ஊசலாடிய உனக்காய்…

ம்!…
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்!
என் இதழ் பதித்து
இன்று உனக்காய் தந்துள்ளேன்!

இதோ எடுத்துக் கொள்
இன்றோடு நான்
உன்னுடன் கலந்து விட்டேன்!

*** இவள் - சத்தியா ***

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

47 - பாசவலை அறுத்தாயோ…?

user posted image

பாசவலை அறுத்தாயோ…?


கண் விழித்துப் பார்க்கின்றேன்
கண் எதிரே நீ!

கதை தொடுக்க முயன்றும்
கடிவாளம் போட்டவளாய்
மௌனித்து நிற்கின்றேன்!

ஓ!…
முட்டைகள் மீது
பின்னங் கால்களால்
மண் கிளறி மூடி விட்டு
திரும்பிப் பாராது செல்லும்
ஆமையைப் போலே…

பணம் குணத்தை மாற்ற
வசதிகளும் வாய்ப்புகளும்
வளர்ந்த நிலை மறக்க…

வந்த பாதை மறந்து
வாழ்ந்த வீடு கடந்து
விரைந்து செல்கிறாய் நீ!

உனைப் பார்த்ததும்
விக்கியழாக் குறையாக
விம்மி விழும்
மெல்லிய விசும்பல்கள்
என் நெஞ்சில் ஒலிக்கிறது!

இது பழகிய அடிதான்
என்றாலும்
மீண்டும் மீண்டும்
வலிக்கத்தானே செய்கிறது!

ம்…
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
ஓடும் ஒரே இரத்தத்தினுள்
எத்தனை
முரண்பாடுகள் பார்த்தாயா…?

போடா போ!
இனி என்ன…

நீ வாழ்ந்த இந்த இடத்தையும்…
நீ நேசித்த இந்தப் பூக்களையும்…
நீ அடிக்கடி பாடும்
அந்தப் பாடலையும் பாடிக் கொண்டு…

உன் நினைவுகளோடு
வாழ்ந்து விட்டுப் போகின்றேன்!

*** இவள் - சத்தியா ***

48 - தூறலில் உன் நினைவு!

user posted image

தூறலில் உன் நினைவு!

மழை தூறத் தொடங்கும் போதே
நான் நனைய ஆரம்பித்து விடுகிறேன்
உன் நினைவுகளில்!

சிறு சிறு
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!

ம்…
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!

ஓ!…
என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!

என் நெஞ்சுக்குள்
இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!

ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…

பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில்

இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…

இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…

நனைந்து கொண்டிருக்கிறது
இந்த மனசு!

*** இவள் - சத்தியா ***

49 - எப்படிப் பறப்பேன் சொல்…?

 

user posted image

எப்படிப் பறப்பேன் சொல்…?

பறந்து வரச் சிறகிருந்தும் - நீ
பறந்து வராமல்
உன் இறக்கைகளை
ஒடுக்கி வைத்துக் கொண்டு…

என்னைப்
பற பற என்கிறாய்!

என் முறிந்த சிறகுகளோடு
நான் எப்படிப் பறப்பேன் சொல்…?

இருப்பினும்…
என்றாவது ஓர் நாள்
நானும் என் இறக்கைகளை விரித்து
உன்னிடம் பறந்து வரலாம்!

அதுவரை
உன் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும்
வாய்ப்பையாவது
எனக்குத் தவறாமல் கொடு
அது போதும் எனக்கு!!

*** இவள் - சத்தியா ***

50 - வரம் தா!

user posted image

வரம் தா!

சலனமின்றி
நாளும் அமைதியாய்
ஓடிக்கொண்டிருந்த
வாழ்க்கை நதியில்
மனசில் கல்லெறியப்பட்டு
சட்டெனத் தடுக்கி விழ…

இதோ…
இந்தக்கணம்
இதழ் விரிக்கக் காத்திருக்கும்
இந்த ரோஜாவைப் போல…

இதோ…
இந்த நிமிடம்
இதயம் திறக்கக் காத்திருக்கும்
இந்தக் கவிதையைப் போல…

நானும்
உன் வருகைக்காய்
வரம் வேண்டிக்
காத்துக் தவம் கிடக்கின்றேன்.

ம்…
நீ வரம்தான் தரவில்லை
ஒரு முறை திரும்பிப் பார்த்து…

எப்போதாவது
நீ உதிர்க்கும்
அந்த ஒற்றைப் புன்னகையை…

நீ வினாடி நேரத்தில்
விட்டெறியும்
அந்தப் பார்வையை…

எனக்காய்
ம்… எனக்காய் மட்டும்!

மறவாமல் ஒரு முறை
வரமாய் என் மீது
வீசியெறிந்து விட்டுத்தான் போவேன்!

*** இவள் - சத்தியா ***

29 - அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…?

user posted image


அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…?

குறும்புத் தனமும்
குழிவிழும் கன்னமும்
குறு குறு நடையும்
கொஞ்சு மொழியும்…

கொஞ்ச நேரத்திலேயே
அவள் என்னையும்தான்
கொள்ளை கொண்டாள்!

அவளின்
அத்தனை சில்மிசங்களையும்
ரசித்தவாறே அருகே நானும்!

ம்!…
வெளியே
மழைத் தூறல்!

விரும்பி அடம் பிடித்து
வெளியே சென்று
நனையத் துடிக்கிறாள் அவள்!

தூறலில் நனைய விட
அவள் அன்னைக்கு
துளி கூட மனமில்லை!

இருப்பினும்…
சின்ன மனம் நோகாமல்
அன்னை அவள்
தன் மனதை மாற்றுகிறாள்!

கள்ளமில்லா பிள்ளை அவள்
துள்ளி ஓடிச் சென்று
கைகள் இரண்டையும் நீட்டியபடி
கல கலவெனச் சிரிக்கின்றாள்!

ஓ!…
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா…?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்…?

ம்!…
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!

*** இவள் - சத்தியா ***

52 - பயண விதிகளோ… ?

user posted image

பயண விதிகளோ… ?

தூரத்தில் மங்கலாய்த்
தொடு வானம்!

துரத்தித் துரத்தி
எட்டிப் பிடித்து விடத்தான்
நாளும் துடிக்கிறேன்!

ஆனாலும்…
சாண் ஏற
முழம் சறுக்கி
சரிந்தே விழுகிறேன்!

ம்!…
காத்திருப்புக்கள்
கருகத் தொடங்கும் போதும்…
ஏமாற்றங்கள் விரட்டும் போதும்…

தோற்றுப் போகிறது மனசு!
கலைந்து போகிறது கனவுகள்!

சரி…
என்னைச் சுற்றி
வட்டமிட்டிருக்கும் நிசப்தம்
என்னோடு மட்டும்
உறங்கிப் போகட்டும்!

அதுவரை
வழி விட்டு
ஒதுங்கி நடக்கின்றேன்
ஊனத் தழும்புகளுடன்…

*** இவள் - சத்தியா ***

53 - சின்னக் கண்மணியே!

user posted image

சின்னக் கண்மணியே!

சின்னக் கண்மணியே
சிரித்திடும் சிறு பூவே

கன்னக் குழியினிலே
கவிதைகள் பிறக்குதடீ

அன்னம் போன்றவளே
அழகிய பொன் மானே

பின்னல் நடையினிலே
பின்னால் இழுத்தவளே

சின்னஞ் சிறியவளே
சின்னப் பெண் குயிலே

அன்பின் உறைவிடமே
அழகில் மயிலடி நீ

கன்னங் கருவிழியால்
கதைகள் சொல்வாயோ…?

*** இவள் - சத்தியா ***

« முந்தைய இடுகைகள் · அடுத்த பதிவுகள் »