01 – நிலாத் தூறல்!

அனாதை ஜீவனாய் நான்!

என் உயிரோடு உறவாடி…
என் உணர்வோடு கலந்து…
எனை அரவணைத்துக் காக்க
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார் இவ்வுலகில்…?

உன் அன்பு மழைத்துளி ஒன்று
என்மேல் விழாதா என
ஏங்கித் தவித்து
அன்புப் பிச்சை கேட்கும்
அனாதை ஜீவனாய் நான்!

 

உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***
user posted image