என் நெஞ்சாங் கூட்டில்
உன் நினைவுக் கொப்பளங்கள்
உடைந்து இரத்தம் வடிய
பிணிகொண்டு எழுந்து
துடிக்கிறது இந்த உயிர்…!
என்னானதோ ஏதானதோ
என எண்ணி எண்ணி
நெஞ்சுக்குள் பிரளயமாய்
வெடித்துச் சிதறும்
எண்ணப் பின்னல்களோடு
விம்மி வெடித்து
சிதறுகிறது இந்த மனசு…!
ம்… நகர மறுக்கும்
நரகப் பொழுதுகளோடு
போராடிப் போராடி
உன் நேச வார்த்தைக்காக
இன்றும் காத்திருக்கிறேன் நான்…!
படம் – ரோஜா.
பாடல் – காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே…
*** இவள் – சத்தியா ***


Abufaisal சொன்னது,
ஜனவரி 24, 2012 இல் 3:57 பிற்பகல்
தினம் ஒரு கவிதை…. ம்ம்…. நீங்க நடத்துங்க…. பள்ளியில் பாடம் படிக்கிறிங்களோ இல்லையோ இங்கே நல்லா பாடம் நடத்துறீங்க…. சத்யா…! உங்களை பாராட்டலாம்… மென்மேலும் வளருங்கள்…
சத்தியா சொன்னது,
ஜனவரி 24, 2012 இல் 11:25 பிற்பகல்
ஹா ஹா ஹா… நன்றி Abufaisal
மழை சொன்னது,
ஜனவரி 25, 2012 இல் 5:29 பிற்பகல்
காதல் வலிகளுகேற்ற காதல் சோக பாடலும் கவிதையும் சூப்பருங்கோ!!!
சத்தியா சொன்னது,
ஜனவரி 25, 2012 இல் 10:27 பிற்பகல்
ம்ம்… நன்றி கண்ணன்.