51 – முத்தம் !!!

user posted image

ஓ!…
முத்தம்!
முதல் முத்தம்!

உண்மையில்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா…?

user posted image

என்
மேலுதடும் கீழுதடும் சேர்ந்து
உன் பெயரை உச்சரித்த போது…

இழுத்து
இச்சென்று
இதழ் பதித்தாய்
தித்திப்பாய் ஒரு முத்தம்!

ம்ம்!…
அதுதான் முதல் முத்தம்!!

user posted image

நீ முத்தமிடும்போதுதான்
நினைத்துக் கொண்டேன்!

அடடா!…
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா…?

user posted image

செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி…

நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி…

ம்!…
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!

user posted image

அட…
போடா!

உன்னோடு
எத்தனை முறை
நனைந்தாலும் கூட
எனக்கு அலுப்பதே இல்லை
இந்த முத்தக் குளியல் மட்டும்!!

*** இவள் – சத்தியா ***

2 மறுமொழிகள்

  1. cheenakay சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 11:01 மு.பகல்

    //நொடிக்குள் பல யுகங்கள்
    தொலைந்து
    நாடி நரம்புகள் புடைக்க
    நளின நெளிதலுக்குள்
    இன்பத் தேன் பருகி…//

    நொடிக்குள் பல யுகங்கள் “தொலைத்து”

    என இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ !

    அழகான கவிதை. அனுபவித்து எழுதப்பட்ட கருத்து. நன்று ! நன்று !
    நல்வாழ்த்துகள்

  2. நவீன் ப்ரகாஷ் சொன்னது,

    நவம்பர் 10, 2008 இல் 4:44 மு.பகல்

    //செவ்விதழ்
    என் இதழ் மீது உரச
    இமைகள் செருக
    கரங்கள் இறுக்கி
    சுரங்கள் மீட்டி…

    நொடிக்குள் பல யுகங்கள்
    தொலைந்து
    நாடி நரம்புகள் புடைக்க
    நளின நெளிதலுக்குள்
    இன்பத் தேன் பருகி…

    ம்!…
    தந்தாயே
    தித்திப்பாய் ஒரு முத்தம்!//

    சத்த்தியா….

    தித்த்த்த்திப்பது முத்தங்கள் மட்டும் அல்ல…
    கவிதைகளும் தான்… :) )

    வாழ்த்துக்கள்… !!


மறுமொழியொன்றை வழங்குக