108 – எழுது! … எழுது!

img79/1880/uu2wzmdbx1.jpg 

எழுது! ….. எழுது!
————————-

எழுது ….. எழுது!
ஒரு கவிதை எழுது!

எனக்காக – நீ
ஒரு கவிதை எழுது!

ம்…!
என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பரவாயில்லை
என்னையும் நேசிப்பதாய்
ஒரு கவிதை எழுது!

அழுது அழுது
தூர்ந்த என் விழிகளுக்கு – ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை!

பழுவினைச் சுமந்து சுமந்து
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை!

எழுது! ….. எழுது!
ஒரு கவிதை எழுது!

எனக்காக – நீ
ஒரு கவிதை எழுது!

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3881&st=0#entry48386

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. பிரியா சொன்னது,

    மே 5, 2007 இல் 8:46 மு.பகல்

    //என்னை மட்டும் நேசிப்பதாய்
    எழுதாவிடிலும் பரவாயில்லை
    என்னையும் நேசிப்பதாய்
    ஒரு கவிதை எழுது!//

    நல்ல வரிகள்

    என்னை நேசிப்பதாய்
    எழுதாவிடிலும் பரவாயில்லை
    என்னை நேசிக்கவில்லை
    என்றாவது எழுது


மறுமொழியொன்றை வழங்குக