036 – கண்ணீர் அஞ்சலி!

 img99/38/mullaikferrd9.jpg

 

இரும்பான மனம் கொண்ட
இரக்கமில்லா மனிதர்கள்
இயந்திரப் பறவைகள் மூலம்
ஏவிவிட்ட எச்சங்களினால்…

 

கண்மூடி இமைப்பதற்குள்
கண்மணிச் செல்வங்கள்
கருகிச் சாம்பலான கோலம்
கண்ணீரை நிறைக்கிறது!

 

கண்ணீர் விட்டு
கதறி அழுது
கவலைதனை கழுவி
கல்லாக்கிக் கொள்வோம் – நெஞ்சை
கல்லாக்கிக் கொள்வோம்!

 

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. CAPitalZ சொன்னது,

    அக்டோபர் 10, 2006 இல் 3:13 பிற்பகல்

    இப்படி கவிதை எழுதத் தான் எனக்கும் விருப்பம். ஆனால் முடியாமல் இருக்கிறதே.

    ______
    CAPital
    http://1kavithai.wordpress.com/


மறுமொழியொன்றை வழங்குக