விதி வரைந்த கோலங்கள்-5
அவன் கதவைத் திறந்த போது…
அங்கே அவளின் அண்ணனும், அவனின் நண்பன் ஒரு வனும் நின்றனர். தானே சாந்தியின் அண்ணன் எனவும், மற்றவன் தனது நண்பன் எனவும் அறிமு கப்படுத்திக் கொண்டு உள்ளே வந்ததும்…
ஓடிப் போய் அண்ணனின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் சாந்தி. அவளின் கதறல் கண்டு அந்த அண்ணனின் நெஞ்சம் கலங்கிய தோடு… அவன் கண்களில் கண்ணீரையும் வரவழைத் தது. உடன் பிறந்த இரத்தம் இல்லாவிடிலும்; உறவான உரிமையுடன் அவனுள்ளமும் ஊமையாய் அழுதது.
அவளை ஒருவாறு தேற்றி விட்டு, நடந்தவைகள் யாவற்றையுமே முற்றாக அறிந்து கொண்ட அவளின் அண்ணனும், அவனின் நண்பனும் சமாதானமாக அரவிந்தோடு கதைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவனோ இவர்கள் கூறுவது எதையுமே செவிமடுக்காது…
“வீட்டிற்கு ஒரு சீதேவியை எதிர்பார்த்தால் இங்கே ஒரு மூதேவி எல்லோ வந்திறங்கியிருக்கு… இந்த மூஞ்சி யைப் பார்த்தால் எப்படி குடும்பம் நடத்த மனம் வரும்?”… என்றான்.
அதுவரை பொறுமையோடு கதைத்துக் கொண்டிருந்த அவள் அண்ணன்… பொறுமையை இழந்தவனாய்…
“டேய் பொறுக்கி… நீ மட்டும் பெரிய மன்மதன் என்று நினைக்கிறியா?”…
என்றவாறே சடார் என விட்ட அடி, அரவிந்தின் கன்ன த்தைப் பதம் பார்த்தது. அங்கே வார்த்தைகள் முற்றி கடைசியில் கைகலப்பாய் மாறின.
அதைச் சற்றும் எதிர்பாராத அரவிந்…
“உடனடியா இவளையும் கூட்டிக் கொண்டு வெளியில் போங்கடா நாயளே “… என கொலை வெறி பிடித்தவன் போல் காட்டுக் கத்தலில் கத்தினான்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு… ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று அழுது கொண்டு நின்றவளும்… திடுக் கிட்டுப் போய்… ஓடிச் சென்று தன் அண்ணனை மறித்தவாறு….
“அண்ணா!… வேண்டாம் அண்ணா… சண்டை எதுவும் வேண்டாம். எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம். ப்ளீஸ் அண்ணா… என்னையும் உங்களோட கூட்டிக் கொண்டு போயிருங்கோ”…
என தன் இரு கரங்களையும் கூப்பி… அழுது கெஞ்சிய படி நின்றாள்.
அவளின் அந்தக் கோலம்… அண்ணனின் அடி மனதை நோகச் செய்தது. இனி அவனுடன் கதைத்து எதுவுமே நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட தும்… சாந்தியையும் கூட்டிக் கொண்டு மூவருமாய் அங்கிருந்து வெளியேறினார்கள்.
சில மணி நேரப் பயணத்தில் பிரான்ஸ் வந்தடைந்த வளுக்கு அண்ணன் இருந்த வீட்டைப் பார்த்தபோது… கவலையாகவே இருந்தது. காரணம்… கோழிக்கூடு போன்ற ஒரு சிறிய றூம், ஒரு குட்டிக் குசினி, அதற்குள் 5 நண்பர்கள் தங்கி இருந்தார்கள்.
அதைப் பார்த்த போது… “இதுக்குள் எப்படி இருந்து சமாளிக்கப் போகிறேன்?”… என்றும்… அண்ணனுக்கு நானும் பாரத்தைக் கொடுத்து விட்டேனே… என்ற வேதனையும் எழுந்து நின்றது. ஆனாலும் அவை எல்லாவற்றையும் சமாளித்துப் போக வேண்டிய கால கட்டத்தில்தான் இன்று தான் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.
அண்ணன் பிரான்ஸ் வந்து 15 வருடங்களைத் தாண்டிய போதும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், குடியும் கூத்துமாய் காலத்தைக் கழித்திருந்ததை அப்போதே அவளால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது.
வெளிநாடு வந்திறங்கிய அதே நாளிலேயே தன் வாழ்க் கையைத் தொலைத்து விட்டு தடுமாறி நிற்கும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து நிற்கும் அந்த சின்னஞ் சிறிய றூம், ஒரு கோயிலாகவும்… அங்கே அவள் அண்ணன் ஒரு தெய்வமாகவே காணப்பட்டான்.
அதிகாலை வேளை… வேலைக் களைப்பில் வந்து படுத்திருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அங்கே படுத் துக் கிடந்தார்கள். அவர்களைக் குழப்பாது, இப்போது சற்று ஓய்வெடுக்குமாறும்… நாளை கதைக்கலாம் என அவள் அண்ணன் கூறி, ஓர் மூலையில் ஒதுக்குப் புறமாய் படுக்கை விரித்து அதில் படுத்துக் கொள்ளு மாறு சொன்னான்.
போய் படுத்துக் கொண்ட அவளுக்கு அழுகை அழுகை யாக வந்தது. அவளால் அங்கே சத்தம் போட்டு அழ முடியவில்லை. தலையைப் போர்வையால் மூடிக் கொண்டு சத்தம் வராமல் வாயைப் பொத்திக் கொண்டு அழ… இன்னும் அதிகமாய் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன் தலை விதியை நினைத்து, தலையணை யால் முகத்தை மூடிக் கொண்டு சத்தம் வராமல் குமுறினாள் சாந்தி.
பொழுதும் புலர்ந்தது. தன் பெற்றோர்கள் தனது ரெலி போனுக்காக காத்திருப்பார்கள். தன்னோடு கதைத்த பின்பே ஊருக்கு கிளம்புவார்கள் என்று அண்ணனிடம் சொன்ன போது… ரெலிபோனை எடுத்து… கதைக்குமாறு கொடுத்தான். அவளின் போனுக்காய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் சாந்தியின் குரலைக் கேட்டதும்…
“சாந்தி!… எப்படிம்மா இருக்கிறாய்? ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் சேந்திட்டியே மகள்? மாப்பிள்ளை எப்படியம்மா இருக்கிறார்?”… தாயின் அன்பான விசா ரிப்புகள் அடுக்கடுக்காய்த் தொடர்ந்தன. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு…
“ஓமம்மா ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்து சேர்ந் திட்டன். அவரும் நல்லா இருக்கிறாரம்மா. அவர் ரெலி போனை எடுத்துத் தந்து போட்டு குளிக்கப் போட்டார். அதனால அவர் இப்பப உங்களோட கதைக்க ஏலாது. நீங்கள் கேட்டதாக நானே சொல்லி விடுறன்”… என்று சொல்லி ஒருவாறு தப்ப முயல… தாயிடமிருந்து போனை வாங்கிய அவளின் அப்பாவும்…
“பிள்ள சாந்தி!… நீயும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவரோட போய்ச் சேர்ந்தது சந்தோசமம்மா. மாப்பிள யும் உன்னோட சந்தோசமா இருக்கிறார் தானே?”… என்று கேட்கவும்… உடனே பதில் சொல்ல வாய் வராமல் வெகு நேரம் திணறி விட்டுத் திக்கித் திக்கி…
“ஓமப்பா… அவர் என் மேல ரொம்பப் பிரியமா இருக் கிறார்”… என்று அவள் கூற… அடங்கி இருந்த சோகம் வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. ஆனா லும் அதைக் வெளிக்காட்டிக் கொள்ளாது …
“அப்பா… நீங்கள் எல்லாரும் சுகம் தானே? எப்ப ஊருக்கு போகப் போறீங்கள்?”… என்றாள்.
“ஏன் சாந்தி உன்ர குரல் ஒரு மாதிரி இருக்குமாப் போல இருக்கே?”… தன் பிள்ளையின் குரலை பெற்ற வருக்கு புரிந்து கொள்ள முடியாமலா போய் விடும்?
தன் தளர்ந்த குரலை வைத்து தந்தை கண்டு பிடித்து விட்டதை அவள் புரிந்து கொண்டாள். ஆனாலும் நடந்து முடிந்த விடயங்களை இப்போது அவளால் சொல்ல முடியவும் இல்லை. சொல்லவும் அவள் விரும்பவும் இல்லை. தான் வந்திறங்கிய அன்றே தனக்கு இடி விழு ந்த செய்தியைக் கேட்டால் அவர்களும் இடிந்து போய் விடுவார்கள். இப்போதைக்கு தன் சோகம் தன்னோடே இருக்கட்டும்…. இவற்றை எல்லாம் சொல்லி அவர்க ளையும் நோகடிக்க அவள் விரும்பாமல்…
“அப்படி ஒன்றும் இல்லையப்பா… பயணக் களைப்பு… இட வித்தியாசம், தண்ணி வித்தியாசம், அதைவிட இப்பதான் நித்திரையால வேற எழும்பினன்… அதுதான் குரல் அப்படி இருக்குப் போல”…. என்று ஒரு பெரிய பொய் மூட்டையைத் தூக்கிப் போட்டாள்.
“சரி பிள்ள.. உன்ர போனைத்தானம்மா பார்த்துக் கொண்டு நிண்டம். இனி என்ன? இன்றைக்குப் பின் னேரம் கிளம்ப வேண்டியதுதான்… உடம்ப கவனமாப் பாத்துக் கொள்ளு சாந்தி. மாப்பிள்ளையயும் கவனமா பார்த்துக் கொள்ளம்மா… நீ பக்குவமாய் வளர்ந்த பிள்ள, உனக்கு நான் புத்தி சொல் வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்லுறன்”… என்றார்.
“சரி அப்பா… நீங்கள் ஒண்டுக்கும் கவலைப் படாதீ ங்கோ. அம்மா, தங்கச்சிமாரைக் கூட்டிக் கொண்டு கவனமாகப் போய் வாங்கோ. நான் உங்களுக்கு கடிதம் போடுறன்”… என்று சொல்லி… போனை வைத்து விட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள் சாந்தி.
அதுவரை ஓரளவு ஓய்ந்து போயிருந்த அழுகை பெற்ற வர்களோடு கதைத்து விட்டு ரெலிபோனை வைத்த தும்… ஒப்பாரியாக வெளி வந்தது.
தொடரும்……..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4750
